Skip to main content

ஒரு டோக்கன் வேணும்

அவர் எப்பொழுது என்னருகில் வந்தார் என்று கவனிக்கவில்லை. நான் அவரை எதேச்சையாக கழுத்தை திருப்பி பார்க்கும் பொழுது அதற்காகவே காத்திருந்தவர் போல ஒரு டோக்கன் வேணும்என்று சொன்னார். அதை.கிரகிக்கவே எனக்கு சில வினாடிகள் ஆனது. அது கொஞ்சம் பிரபலமான மதுரையில் இருந்த ஒரு டீக்கடை.  



நான் ஏற்கனவே ஒரு டீயை குடித்துக் கொண்டிருந்தேன். வழக்கமாக டீ வேண்டும்’ என்றோ   அல்லது பணம் வேண்டும் என்றோ  எப்போதேனும் ஒருவர் கேட்பார். ஆனால் இவர் கேட்பது  ஒரு டோக்கன் வேணும்என்று. அருகிலிருக்கும் மிக தெரிந்தவரிடம் கேட்பது போல் கேட்கிறார். டீ வேண்டும் என்று சொல்வதே உணவு வேண்டும் என்று யாசிப்பதை போல என்று நினைத்திருக்கலாம். பணம் வேண்டும் என்று சொல்வதும் இழுக்கு என்று நினைத்திருக்கலாம். நான் எதுவும் பேசவில்லை. எனது டீயை குடித்து முடிக்கும் முன்னே கல்லாவிலிருந்த ஆளிடம் காசு கொடுத்து ஒரு டீ டோக்கன் வாங்கி அவரிடம் தந்தேன். டீ எடுத்துக் கொண்டு வந்த அவரிடம் மெதுவாகப் பேச்சு கொடுத்தேன். அவர் வேறு ஏதோ ஒரு ஊரில் செக்யூரிட்டியாக வேலை செய்வது தெரிய வந்தது. கண்டிப்பாகக் பிச்சைக்காரர் இல்லை. ஆனால் தற்சமயம் பணமில்லை. இது அவரது ஊரும் இல்லை. இருந்தாலும் நேரடியாக பணம் கேட்க தயக்கமாக இருந்திருக்கலாம். ஒரு டோக்கன் வேண்டும் என்ற குரல் எந்தவித கெஞ்சலோ தயக்கமுமின்றி உரிமையுடன் ஒலித்தது. நாஞ்சில் நாடனின் ஒரு கதையில் மகாராஷ்டிராவில் ஓடும் ஒரு முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டியில் பெட்டியில் தனது கடைசி சப்பாத்தியை சாப்பிட முயலும் கதை நாயகனின் கையை  அருகில் இருக்கும் ஒரு முதியவர் தடுத்து "யாம் உண்பேம்” (hami khana) என்று.சொல்லுவார்.  நான் உண்ண வேண்டும் என்று அல்ல. நீ உண்ணலாம் என்றல்ல. நாம் உண்ணலாம்.

சில மனிதர்கள் பொருள் ரீதியாக விளிம்பு நிலையை அடைந்தாலும்  அவர்களது உள்ளம் அதை ஏற்றுக்கொள்வதில்லை. அவர்கள் நேரடியாக யாசிப்பதை எப்பொழுதுமே விரும்புவதில்லை. இது ஒரு வகையில் ஒரு  விசை போல செயல்பட்டு வர்களை  மேலும் கீழான விளிம்பு நிலைக்குத் தள்ளாமல் மேல் நோக்கி செலுத்துகிறது.

 

 



Comments

Popular posts from this blog

டீ பார்ட்டி

 1990ஸ் ல ஸ்கூல் படிக்கும் போது, ஒவ்வொரு வருட கோடை விடுமுறை ஆரம்பிக்கும் போது,  ஒரே ஸ்கூல்ல படிக்கிற நண்பர்கள் பதினைஞ்சு, இருபது பேரு சேர்ந்து காசு கலெக்ட் பண்ணி டீ பார்ட்டி  வைக்கிறது வழக்கம். பொதுவா கடைசி பரிட்சை சமூகவியல் நடக்கிற அன்னிக்கு சாயங்காலம் நடக்கும்.. சில சமயம் அதுக்கு மறுநாள் கூட வைப்போம்.  அதுல மொத முடிவு பண்ற விஷயம்.. யார் வீட்ல வைக்கிறதுன்னு.. எங்க குரூப்ல ரமேஷ் ன்னு ஒருத்தன் வீட்ல நல்ல பெரிய மொட்டை மாடி இருக்கும்.. அவங்க அப்பா அம்மா கொஞ்சம் ஜோவியல் டைப்.. ரொம்ப ஸ்ட்ரிக்ட் கிடையாது..  அதனால அவங்க வீட்ல எங்க குரூப் வைக்கும்.. நாங்க எல்லோரும் அதே ஊர்ல இருக்கிற நாடார் ஸ்கூல் ல ஒம்போதாப்பு படிச்சுக்கிட்டு இருந்தோம்.   அம்பது ல இருந்து நூறு ரூபா வரைக்கும் ஒவ்வொருத்தர்ட்டயும் கலெக்ட் பண்ணுவோம்.   பேரு தான் டீ பார்ட்டி ஆனா வெறும் டீ மட்டும் இல்ல.. நடக்கிற அன்னிக்கு காலையில இருந்தே பார்ட்டி ஏற்பாடுகள் பண்ண ஆரம்பிச்சிவோம்.. ஒரு நோட்டு வாங்கி கலக்ஷன் டீடெயில்ஸ், செலவு டீடெயில்ஸ் எழுதி வைப்போம்.. மூணு பேரா பிரிஞ்சி ஆளுக்கு ஒரு வேலை...

இவான்

  வருடம்  2320 . இன்னும் மூன்று மணி நேரத்தில் அந்த பெரிய விண்கலம் கிளம்பிவிடும். இதே போல் ஒவ்வொரு ஊரிலிருந்தும் ஒரு விண்கலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எல்லா விண்கலமும் ஒரே நேரத்தில் கிளம்பும் வகையில் நிரல் செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரு விண்கலமும் பதினோராயிரம் பேர் தங்க கூடிய வசதி கொண்டது. தற்சமயம் பூமியில்  ஒவ்வொரு நகரத்திலும் சுமார் பதினைந்தாயிரம் பேர்தான் வாழ்கின்றனர். அனைவரையும் கூட்டி செல்ல முடியாது. கிட்டத்தட்ட மூன்று வருட பயண கால முடிவில் மற்றொரு கேலக்ஸியில் உள்ள இவான் கிரகத்தை அடையும். அங்கு இந்த மனிதர்கள் மறு வாழ்க்கை ஆரம்பிக்க வேண்டும். அதற்கு தேவையான அனைத்து பொருட்களும் நேற்றே இந்த விண்கலத்தில் ஏற்றப்பட்டு விட்டது. இந்த விண்கலத்தை விட்டு விட்டால் பூமியிலேயே இருக்க வேண்டியதுதான். பூமி மனிதர்கள் வாழும் தன்மையை இழந்திருந்தது. உணவு மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை, காற்று மாசு, வித விதமான நோய்கள் . அதனால் தான் ஒவ்வொரு நகரத்திலும் பதினோராயிரம் பேரே வாழ்கின்றனர். இது போதாதென்று இன்னும் இரு நாட்களில் ஒரு இமயமலை அளவு பெரிய விண்கல் பூமியை தாக்கவிருக்கிறது. கிட்டத்தட்ட பூமி...