சத்குரு நிறைய சங்கரன் பிள்ளை கதைகள் சொல்லுவார். அந்த inspiration-னில் நான் எழுதிய சில சங்கரன் பிள்ளை கதைகள் .
----
சங்கரன் பிள்ளை வெளியே தெரியும் அந்த புதிய கிரகத்தை ஆசையோடு பார்த்தார். விண்கலத்தில் மொறு மொறு வென மிளகாய் பஜ்ஜி போட்டு கொண்டுருந்த சங்கரன் பிள்ளையின் அம்மா, "இந்த கிரகமவாது தேறுமா? " என்று கேட்டார். ஒரு பெருமூச்சுடன் சங்கரன் பிள்ளை, அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்த தனது விண்கலத்தில் இருந்து அந்த கிரகத்துக்கு செல்வதற்கான சிறிய டாக்கர் ஷிப்பில் ஏறி அதை கிரகத்தை நோக்கி செலுத்தினார். இன்றோடு இருநூறு வருடம் ஆயிற்று, பூமியை விட்டு வந்து. கொரோனா பூமியை அழித்த பின், எப்படியோ சங்கரன் பிள்ளை தனது அம்மாவுடன் ஒரு விண்கலத்தில் ஏறி தப்பித்து விட்டார். அன்றில் இருந்து வாழ்வதற்கான சூழ்நிலை உள்ள கிரகமாக தேடி கொண்டுருக்கிறார்கள். இது தோராயமாக ஐம்பதாவது கிரகம்.
அம்மா மிளகாய் பஜ்ஜி போட்டு முடிப்பதற்குள், சங்கரன் பிள்ளை சோர்ந்த முகத்துடன் திரும்பி விட்டார். அதிர்ச்சியான அம்மா, "இதுவும் வாழ் சூழ்நிலை இல்லாத கிரகமா?" என்றார். சங்கரன் பிள்ளை வருத்ததுடன், "ஆம் அம்மா.. அமேசான் ஆப், இந்த கிரகத்துக்கு டெலிவரி லொகேசன் இல்லை என்று சொல்லி விட்டது. எப்படி வாழ்வது?" என்றபடி மிளகாய் பஜ்ஜியை ஒரு கடி கடித்தார்.
----
சங்கரன் பிள்ளை மதிய உணவு முடித்து, ஒரு குட்டி தூக்கம் போட்டு விட்டு, பின்பு ஷாம்பவி செய்வதற்காக மாலை ஆறு மணிக்கு மாடிக்கு செல்ல ஆயத்தமாகும்போது, கதவு தட்டப்பட்டது. கதவை திறந்தால், மந்தகாச புன்னகையுடன் ஒருவர் நின்று கொண்டுக்கிறார். சங்கரன் பிள்ளை, "நீங்கள் யார்" என்று கேட்ட கேள்விக்கு, "நான் தான் சிவன். ஆதியோகி" என்று பதிலளித்தார். அதற்கு சங்கரன் பிள்ளை, "மிக்க மகிழ்ச்சி.. எதுவாக இருந்தாலும், ஏழு மணிக்கு வாருங்கள். ஷாம்பவி செய்யும் நேரம் இது" என்று சொல்லி விட்டு மாடிக்கு ஏறினார்.
----
சங்கரன் பிள்ளை நேர்முகத்தேர்வுக்கு சென்ற பச்சை கம்பெனி மற்றும் மஞ்சள் கம்பெனி இரண்டிலும் இருந்து வேலை வாய்ப்பு கடிதம் வந்திருந்தது.
பச்சை கம்பெனியின் ஆஃபர் வருடத்திற்கு ஒரு கோடி. ஆனால் அதில் பத்தாயிரத்துக்கு ஒரு ஹெட் போன் நாமே வாங்கி கொள்ள வேண்டும்
மஞ்சள் கம்பனின் ஆஃபர் வருடத்திற்கு இருபது லட்சம். ஆனால் அவர்களே ஹெட் போன் கொடுத்து விடுவார்கள்.
எந்த குழப்பமும் இன்றி சங்கரன் பிள்ளை, மஞ்சள் கம்பனியின் ஆஃபரை ஏற்பதாக பதில் கடிதம் எழுதினார். அதிர்ச்சியான புது நண்பர், "ஒரு கோடியில் பத்தாயிரம் போனாலும், மீதம் அதிகம் மஞ்சள் கம்பனியை விட. ஏன் இப்படி மஞ்சளை தேர்வு செய்தீர்" என்று கோபத்தோடு கேட்டார். அதற்கு சங்கரன் பிள்ளை "வாஸ்தவம்தான்.. ஆனால் பத்தாயிரம் செலவு செய்து விட்டால் எனக்கு தூக்கமே வராது" என்றார்.
----
Comments