Skip to main content

நொரநாட்டியம்

பூமியில் கிட்டத்தட்ட எல்லா எல்லா உயிரினங்களும் அழிந்து போய், பூமியை கிட்டத்தட்ட 90% கதிரியக்கம் மூடிய நிலையில், எப்படியோ இருக்கும் அறிவை வைத்து குரோமியம் பூசப்பட்ட பங்கரில் குடும்பத்தை பாதுகாப்பாய் வைத்து விட்டேன். கணினி அறிவும் உண்டென்பதால், நாசாவின் நெட்வொர்க்கில் எப்படியோ நுழைந்து அடுத்து நடக்கவிருக்கும் நிகழ்வுகளை முன்கூட்டியே அறிந்ததால் தப்பித்தாயிற்று. ஆனால் காலையில் நாசா கணினியில் அறிந்த அந்த பேராபத்து செய்தி தூக்கி வாரி போட்டது. இன்னும் இருபது நிமிடங்களில் கதிரியக்கத்தின் அழுத்தம் தாளாமல் பூமி வெடித்து சிதற ஆரம்பிக்க போகிறது. இன்னும் பல மடங்கு வேகமாக நாசா கணினியை நோண்டியதில், அது நூற்றுக்கணக்கான எஸ்கேப் பாட் செய்து  அதில் பல முக்கியமான நபர்கள் பூமியை விட்டு தப்பிய செய்தி கிடைத்தது. அதோடு அதில் சில பாட், கணினி ப்ரோக்ராம் குறைபாட்டால் பழுதடைந்து, இன்னும் இங்கேயே இருக்கிறது என்ற இனிப்பான செய்தியும் கிடைத்தது. 


குஷியாக ஒரு காபி அறிந்தியவாறே, அந்த பாட்களின் கணினி பழுதை சில நிமிடங்களில் இங்கிருந்தே சரி செய்தேன். அதன் ஆட்டோமாடிக் சிஸ்டத்தை உயிர்பெற செய்து, இங்கு வரவழைக்க ஆணை கொடுத்தேன். இன்னும் பத்து நிமிடங்களில் வந்து விடும். உடனடியாக மனைவிடம் மிக சுருக்கமாக விவரத்தை சொல்லி விட்டு, கிளம்ப சொன்னேன். பத்து நிமிடங்கள் எப்படி போதும் குறைந்தது மூன்று மணி நேரம் வேண்டும் துணிமணிகள் எடுத்து வைக்க என்ற மனைவியிடம், மல்லுகட்டி எப்படியோ ஏழு நிமிடத்தில் குறைந்த பட்ச பொருட்களை மட்டும் பேக் செய்து எல்லோரையும் கிளப்பி பங்கர் மேலே நின்றிருந்த எஸ்கேப் பாட் டில் ஏற்றினேன். 


இன்னும் மூன்று நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில் எஸ்கேப் பாடை கிளப்பும் பட்டனை அமுக்கும் முன் மனைவி, "ஏங்க ஹேண்ட் வாஷ் எடுத்து வைச்சீங்களா.. புது கிரகம் எப்படி இருக்குமோ?" என்றாள்.

"டெட்டால் ஹேண்ட் வாஷ் எடுத்து வைத்து விட்டேன்.." என்று சொல்லி பாடை கிளப்ப முயன்றேன். 

"ஏங்க உங்களை லைப் பாய் ஹேண்ட் வாஷ் தானே எடுத்து வைக்க சொன்னேன்.. டெட்டால்ஹேண்ட் வாஷ்  மருந்து வாசனை வருமே" என்றாள்.

பாடை விட்டு வெளியே வந்து பங்கரில் புகுந்து வேகமாக லைப் பாய் ஹேண்ட் வாஷ்ஷை எடுத்து வெளியே வர முயற்சிக்கும் போது பூமி வெடிக்க ஆரம்பித்திருந்தது. 




Comments

Popular posts from this blog

ஒரு டோக்கன் வேணும்

அவர்  எப்பொழுது என்னருகில் வந்தார் என்று கவனிக்கவில்லை. நான் அவரை எதேச்சையாக கழுத்தை திருப்பி பார்க்கும் பொழுது அதற்காகவே காத்திருந்தவர் போல ‘ ஒரு டோக்கன் வேணும் ’ என்று சொன்னார். அதை.கிரகிக்கவே எனக்கு சில வினாடிகள் ஆனது . அது கொஞ்சம் பிரபலமான மதுரையில் இருந்த ஒரு டீக்கடை.    நான் ஏற்கனவே ஒரு டீயை குடித்துக் கொண்டிருந்தேன். வழக்கமாக ‘ டீ வேண்டும் ’ என்றோ    அல்லது ‘ பணம் வேண்டும் ’  என்றோ   எப்போதேனும் ஒருவர் கேட்பார் . ஆனால் இவர் கேட்பது   ‘ ஒரு டோக்கன் வேணும் ’ என்று. அருகிலிருக்கும் மிக தெரிந்தவரிடம் கேட்பது போல் கேட்கிறார். ‘ டீ வேண்டும் ’ என்று சொல்வதே உணவு வேண்டும் என்று யாசிப்பதை போல  என்று நினைத்திருக்கலாம் . பணம் வேண்டும் என்று சொல்வதும் இழுக்கு என்று நினைத்திருக்கலாம். நான் எதுவும் பேசவில்லை. எனது டீயை குடித்து முடிக்கும் முன்னே கல்லாவிலிருந்த ஆளிடம் காசு கொடுத்து ஒரு டீ டோக்கன் வாங்கி அவரிடம் தந்தேன். டீ எடுத்துக் கொண்டு வந்த அவரிடம் மெதுவாகப் பேச்சு கொடுத்தேன். அவர் வேறு ஏதோ ஒரு ஊரில் ...

டீ பார்ட்டி

 1990ஸ் ல ஸ்கூல் படிக்கும் போது, ஒவ்வொரு வருட கோடை விடுமுறை ஆரம்பிக்கும் போது,  ஒரே ஸ்கூல்ல படிக்கிற நண்பர்கள் பதினைஞ்சு, இருபது பேரு சேர்ந்து காசு கலெக்ட் பண்ணி டீ பார்ட்டி  வைக்கிறது வழக்கம். பொதுவா கடைசி பரிட்சை சமூகவியல் நடக்கிற அன்னிக்கு சாயங்காலம் நடக்கும்.. சில சமயம் அதுக்கு மறுநாள் கூட வைப்போம்.  அதுல மொத முடிவு பண்ற விஷயம்.. யார் வீட்ல வைக்கிறதுன்னு.. எங்க குரூப்ல ரமேஷ் ன்னு ஒருத்தன் வீட்ல நல்ல பெரிய மொட்டை மாடி இருக்கும்.. அவங்க அப்பா அம்மா கொஞ்சம் ஜோவியல் டைப்.. ரொம்ப ஸ்ட்ரிக்ட் கிடையாது..  அதனால அவங்க வீட்ல எங்க குரூப் வைக்கும்.. நாங்க எல்லோரும் அதே ஊர்ல இருக்கிற நாடார் ஸ்கூல் ல ஒம்போதாப்பு படிச்சுக்கிட்டு இருந்தோம்.   அம்பது ல இருந்து நூறு ரூபா வரைக்கும் ஒவ்வொருத்தர்ட்டயும் கலெக்ட் பண்ணுவோம்.   பேரு தான் டீ பார்ட்டி ஆனா வெறும் டீ மட்டும் இல்ல.. நடக்கிற அன்னிக்கு காலையில இருந்தே பார்ட்டி ஏற்பாடுகள் பண்ண ஆரம்பிச்சிவோம்.. ஒரு நோட்டு வாங்கி கலக்ஷன் டீடெயில்ஸ், செலவு டீடெயில்ஸ் எழுதி வைப்போம்.. மூணு பேரா பிரிஞ்சி ஆளுக்கு ஒரு வேலை...

இவான்

  வருடம்  2320 . இன்னும் மூன்று மணி நேரத்தில் அந்த பெரிய விண்கலம் கிளம்பிவிடும். இதே போல் ஒவ்வொரு ஊரிலிருந்தும் ஒரு விண்கலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எல்லா விண்கலமும் ஒரே நேரத்தில் கிளம்பும் வகையில் நிரல் செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரு விண்கலமும் பதினோராயிரம் பேர் தங்க கூடிய வசதி கொண்டது. தற்சமயம் பூமியில்  ஒவ்வொரு நகரத்திலும் சுமார் பதினைந்தாயிரம் பேர்தான் வாழ்கின்றனர். அனைவரையும் கூட்டி செல்ல முடியாது. கிட்டத்தட்ட மூன்று வருட பயண கால முடிவில் மற்றொரு கேலக்ஸியில் உள்ள இவான் கிரகத்தை அடையும். அங்கு இந்த மனிதர்கள் மறு வாழ்க்கை ஆரம்பிக்க வேண்டும். அதற்கு தேவையான அனைத்து பொருட்களும் நேற்றே இந்த விண்கலத்தில் ஏற்றப்பட்டு விட்டது. இந்த விண்கலத்தை விட்டு விட்டால் பூமியிலேயே இருக்க வேண்டியதுதான். பூமி மனிதர்கள் வாழும் தன்மையை இழந்திருந்தது. உணவு மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை, காற்று மாசு, வித விதமான நோய்கள் . அதனால் தான் ஒவ்வொரு நகரத்திலும் பதினோராயிரம் பேரே வாழ்கின்றனர். இது போதாதென்று இன்னும் இரு நாட்களில் ஒரு இமயமலை அளவு பெரிய விண்கல் பூமியை தாக்கவிருக்கிறது. கிட்டத்தட்ட பூமி...